- எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து ஏமாந்து விடாதே. யாரிடமும் அன்பைப் பெற்று ஏமாற்றி விடாதே. - விவேகானந்தர்
- கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்க முடியாவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்? - அன்னை தெரசா
- அதிகமாக சிரிக்கும் மனிதனும், சிரிக்க வைக்கும் மனிதனும் அவன் மனதுக்குள் மிகப் பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்ளின்
- கல்வியும் செல்வமும் எவ்வளவு இருந்தாலும் அடக்கம் இல்லாவிட்டால் பண்பாடென்பது இல்லை. - ராஜாஜி
- வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்
- கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை செய். அடுத்த கடமை என்னவென்று தானே புலப்படும். - கார்லைல்
- நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை. - பூவேஷ்டர்
நன்றி: அ. அப்துல்காதர், மேற்கு தாம்பரம்